மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழகத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அண்மையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இது தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடைய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே, கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக, தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.