மே 24ல் திறக்கப்படும் மேட்டூர் அணை.. சுதந்திரத்திற்கு பிறகு அரங்கேறும் புதிய வரலாறு… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

சென்னை : குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களால்‌ மேட்டூர்‌ அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன்‌ 12 ஆம்‌ நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர்‌ திறந்து விடப்பட்டு, குறுவை நெல்‌ சாகுபடியில்‌ புதிய சாதனை படைக்கப்பட்டது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில்‌ நல்ல மழை பெய்து வருவதால்‌, மேட்டூர்‌ அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர்‌ அணையின்‌ நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும்‌ நீர்‌ இருப்பு 86.25 டிஎம்சி அடியாகவும்‌ உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால்‌ மேட்டூர்‌ அணை தனது முழு கொள்ளளவை விரைவில்‌ எட்டும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின்‌ நலன்‌ கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர்‌
அணையிலிருந்து வழக்கமாக நீர்‌ திறக்கப்படும்‌ நாளான ஜூன்‌ 12க்கு முன்பாகவே,
24.5.2022 முதல்‌ நீரைத்‌ திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌
உத்தரவிட்டுள்ளார்கள்‌.

நமது நாடு சுதந்திரம்‌ அடைந்தது முதல்‌, குறுவை சாகுபடிக்காக நீர்‌ திறந்து விடப்படும்‌ நாளாகிய ஜூன்‌ 12ஆம்‌ நாள்‌ அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள்‌ நீர்‌ திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும்‌. இது மட்டுமின்றி, மே மாதத்தில்‌ இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர்‌ திறந்துவிடப்படுவது இதுவே முதல்‌ முறையாகும்‌. இதனால்‌, திருச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கரூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, மற்றும்‌ கடலூர்‌ ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில்‌ குறுவை சாகுபடியில்‌ நான்கு லட்சம்‌ ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசனம்‌ பெறும்‌.

மேலும்‌, நடப்பாண்டில்‌ டெல்டா மாவட்டங்களில்‌ கால்வாய்களை தூர்வாரும்‌ பணிகள்‌ அனைத்தும்‌ முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, 23.4.2022 முதல்‌ துவங்கப்பட்டு, ரூபாய்‌ 80 கோடி மதிப்பீட்டில்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகின்றன. ஆறுகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில்‌, தற்போது வாய்க்கால்கள்‌ மற்றும்‌ வடிகால்களைத்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள்‌ அனைத்தும்‌ 31.5.2022க்குள்‌ முடிவடையும்‌. இதனால்‌, மேட்டூர்‌ அணையில்‌ இருந்து திறந்து விடப்படும்‌ நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின்‌ கடைமடை வரை அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சென்று அடைய ஏதுவாகும்‌.

இவ்வாறு, மிக முன்னதாக மேட்டூர்‌ அணையிலிருந்து நீர்‌ திறந்து விடப்படுவதால்‌, காவிரி டெல்டா விவசாயிகள்‌ அதிக பரப்பளவில்‌ குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும்‌, சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும்‌ இயலும்‌. வெள்ளக்காலங்களில்‌ சம்பா பயிர்கள்‌ நீரில்‌ மூழ்காது காக்கவும்‌ இந்த நடவடிக்கை உதவும்‌. இது மட்டுமன்றி, தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர்‌ கிடைக்கப்‌ பெறுவதால்‌ டெல்டா பகுதி முழுவதும்‌ நிலத்தடி நீர்‌ உயர்வதற்கும்‌ இது வழிவகுக்கும்‌.

இந்நிலையில்‌, குறுவை சாகுபடிப்‌ பணிகளுக்கான விவசாய இடுபொருட்களும்‌, வேளாண்‌ கடன்களும்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ வேளாண்‌ பெருமக்களுக்கு தடையின்றி கிடைத்திடத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசுத்துறைகளுக்கும்‌, மாவட்ட ஆட்சியர்களுக்கும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியுள்ளார்கள்‌. நீரை முறையாகப்‌ பயன்படுத்தி அதிக பரப்பளவில்‌ குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும்‌ நெல்‌ உற்பத்தியில்‌ புதிய சாதனை படைத்து வளம்‌ பெருகிட வேண்டும்‌ என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வாழ்த்துகளையும்‌ தெரிவித்துள்ளார்கள்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

31 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

32 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

51 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

1 hour ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.