புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள் மாலை அணிவித்து ஒவ்வொரு ஆலயமாக சென்று வந்துள்ளனர். தற்பொழுது ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது, புதுக்கோட்டை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை தங்களது வந்த வாகனங்களை இரண்டு கார் ஒரு சைலோவில் தேநீர் அருந்த ஓரமாக நிறுத்தி உள்ளனர்.
அப்பொழுது அதிவேகமாக வந்த சிமெண்ட் மூட்டை ஏற்றிய ஈச்சர் வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் மீது மோதியது. இதனால் அதே இடத்தில் 4 பேர் இறந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமண சமுத்திரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, காயமடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 108 வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது, மேலும் ஒருவர் பலியானார்.
பின்னர் காயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலை நடந்த சாலை விபத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.