திருப்பத்தூர் : அமைச்சர் மற்றும் எம்எல்ஏ குறித்து இழிவாக பேசியதாக அதேக் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி 9வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் சரிதா. இவரது கணவர் முத்துக்குமார் வழக்கறிஞராக இருந்து வருகிறார். அண்மையில் நடந்த அரசு விழாவில், கவுன்சிலரான தனது மனைவி சரிதாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, அமைச்சர் காந்தி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரை இழிவாகப் பேசி ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் முத்துக்குமார் பதிவிட்டிருந்தது.
இந்த ஆடியோ வைரலான நிலையில், ஆத்திரமடைந்த திமுகவினர் முத்துக்குமாருக்கு சொந்தமான உணவகத்தை தீ வைத்தனர். அதோடு, அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்றிரவு ஆம்பூர் – பேரணாம்பட்டு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, முத்துக்குமாரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து, கைலாசகிரி பகுதியில் வீட்டில் இருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை உமாராபாத் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் முத்துகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.