தமிழகம் முழுவதும் அமைச்சர் எவ வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக நடைபெறும் வருமானவரித்துறை சோதனையில் ஒரு இடத்தில் மட்டும் நிறைவு – மூன்று இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் (3-ம் தேதி) முதல் வருமானவரித்துறை சோதனை தழிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை தொடங்கின. குறிப்பாக, கரூர் மாநகராட்சி பகுதியில் திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள சுரேஷ் வீடு என தொடர்ந்து மூன்று இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
அலுவலகத்தில் உள்ள கோப்புகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கணனிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவை சேர்ந்த மறைந்த கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் மட்டும் தற்போது சோதனை நிறைவு பெற்றது.
தொடர்ந்து சுரேஷ் என்பவர் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள அவரது நிதி நிறுவனம் தோட்டக்குறிச்சியில் முன்னாள் திமுக பேரூராட்சி கவுன்சிலர் வீட்டிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படை போலீஸரை காவலில் உள்ளனர். இன்று காலை நான்காவது நாளாக சோதனை நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.