கோயம்பேடு பேருந்துநிலையத்தை மூட இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்..? திமுக அரசுக்கு பாஜக கேள்வி

எதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் எல் முருகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு எந்த அளவுக்கு தோல்வி உற்ற அரசு என்பதை கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சுட்டிக்காட்டுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஏன் இவ்வளவு விரைவாக மூட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் டிஆர் பாலு தவறான தகவலை பதிவு செய்து கொண்டிருந்தார் ஆகவே நான் குறிப்பிட்டேன். கடந்த ஒன்பது நாட்களாக பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அதில் பல விவாதங்கள் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் டிஆர் பாலு அவர்கள் என்னிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டார். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர் என்ற வகையில் எனக்கு ராமர் கோவில் பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது

தமிழக அரசு எந்த அளவிற்கு தோல்வியுற்ற அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காண்பித்துக் கொண்டிருக்கிறது கோயம்பேடு பேருந்து நிலையத்தை வேகமாக மூட வேண்டும் என்ற நோக்கிடனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதி, அத்தியாவசிய வசதி எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை இதனால் தினம்தோறும் மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சரியான முறையில் இந்த அரசு செயல்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படட்டும், அதே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்.

பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு பேசிய போது குறிப்பிட்டு பேசுவதன் காரணம் குறித்து கேட்டபோது, பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு தவறான தகவலை பதிவு செய்து கொண்டிருந்தார், அப்பொழுது நான் குறிப்பிட்டு நீங்கள் தவறான தகவலை பதிவு செய்கிறீர்கள் என கூறியதற்காகத்தான், அவர் என்னிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டார். ஒட்டுமொத்த அரசியல் பாலிசி. இதுதான் தமிழகத்திலும் அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள், எனக் கூறினார்.

வெள்ள நிவாரணத்திற்கு விதி வழங்கப்படவில்லை என்று என திமுக அரசு குற்றச்சாட்டு கேட்டபோது, மழை பேரிடர் நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதை முதலில் பயன்படுத்த வேண்டும் என்று தான் பாராளுமன்றத்திலேயே அமைச்சர் சார்பாக கூறப்பட்டது மட்டுமின்றி, மத்திய அரசு அனுப்பிய குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள், என்றார்.

என் மண் என் மக்கள் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, இது 200 வது சட்டமன்ற தொகுதியில் நடக்கும் யாத்திரை இதுவரையில் நடைபெற்ற யாத்திரையில் எங்கும் எந்த பிரச்சனைகளும் இன்றி நடைபெற்றது. இங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் பொதுக்கூட்டமாக நடத்த இருக்கிறோம் தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ள இருக்கிறார், எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.