முதல்வரின் தவறுகளுக்கு முட்டுக்கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. அதளபாதாளத்தில் சுகாதாரத்துறை : அண்ணாமலை விமர்சனம்!

முதல்வரின் தவறுகளுக்கு முட்டுக்கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. அதளபாதாளத்தில் சுகாதாரத்துறை : அண்ணாமலை விமர்சனம்!

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாரத்தான் நடத்துவதிலும், முதல்வரின் தவறுகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பரபரப்பாக இருப்பதால், நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஆட்சி விரைவில் மீளா நிலைக்குச் செல்லும். அந்த நபரால் தனது மனைவியை மருத்துவமனைக்கு சரியான நேரத்துக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் இல்லாமல் போயிருக்கிறது. பின்னர், அரசு மருத்துவமனை இறந்த குழந்தையின் சடலத்தை அட்டைப் பெட்டியில் போட்டு கொடுத்துள்ளது.

பெயரளவில் ஓர் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துவிட்டு இந்த விவகாரத்தை ஓரங்கட்டாமல் இதுமாதிரியான நஷ்ட ஈடுகள் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் இதுபோன்ற பாதிக்கப்பட்ட மக்கள் நேர்கொண்ட அத்தனை துன்பங்களுக்கும் விடையாகாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதே காலத்தின் தேவை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் இறந்து பிறந்த குழந்தையின் உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பிணவறை பணியாளர் முறையாக துணியால் சுற்றாமல், அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இறந்த குழந்தையை அட்டைப் பெட்டிக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

13 minutes ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

44 minutes ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

1 hour ago

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

2 hours ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

3 hours ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

3 hours ago

This website uses cookies.