சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட களப்பாறை – விருந்தோம்பி விளை – புளியற விளை இடையேயான பழுதடைந்த சாலையை சீரமைக்க மத்திய அரசின் நகர்புற திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அந்தப் பணியினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற பல ஜாதி, பல மொழி, பல இன, பல சமூகங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் தான் வெற்றி பெறும்.
இன்றைக்கு அவர்கள் செய்கின்ற ஒரு பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளை தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து, அதை அரசியலாக்கி, வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜகவின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும்.
அப்போ தெரியும் அண்ணாமலைக்கு யார் புலி..? யார் நாய்..? என்பது தெரியும், எனவும் பதிலளித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.