மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது ;- கடந்த 2016ம் ஆண்டு ஆலங்குடியில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின். இல்லையென்றால் என்னுடைய அரசியல் திசை மாறி சென்றிருக்கும்.
100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்தப்படும். டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.