உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சிக்கந்தர்சாவடி, வலையங்குளம் அரசுப்பள்ளிகளில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளுக்கு நவீனப்படுத்தும் வகையில் எல்இடி திரைகளை வழங்கி ஸ்மார்ட் வகுப்பறைகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், இந்தியன் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- மதுரை திருப்பாலை பகுதியில் 19ம் தேதி முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக்கண்காட்சி தொடங்க உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணைமுதல்வராக, முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும், எனக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் பேசியது குறித்த கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலினின் திறமைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல முதல்வர் முடிவுசெய்து கொடுப்பார்,” என பேசினார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.