பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார். கடந்த மாதம் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவலுக்கு சென்று வழிபட்டார்.
பின்னர், மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ‘ஹைலி சீக்ரெட் மோஸ்ட் இம்பார்ட்டென்ட்’ என்ற தலைப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மறுநாள் காலையில் பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் முதல் ஆளாக சென்று சந்தித்தார்.
இந்தத் தகவலையும், புகைப்படத்தையும் பாஜகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வந்தனர். இதனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவில் இணையப் போகிறாரா..? என்றெல்லாம் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. வருகிறது
இந்த தகவலை பாஜகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :- அரசியல் செய்யவதற்காக பிரதமர் மோடி தமிழம் வருகிறார். அரசியல் மட்டும் செய்யாமல் அரசாங்க ரீதியாக கவனம் செலுத்தி தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் பாராட்டுவோம்.
பிரதமர் செல்லும் இடங்களில் மரியாதை செலுத்தவும், வரவேற்கவும், உதவி செய்வதற்கும், அவரது கான்வாயில் பயணம் செய்வதற்கும் வழி அனுப்பவதற்கும் அரசோடு பொறுப்பு. அந்த வகையில் என் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எனக்கு இந்த பணியை செய்ய கட்டளை வந்தது. அதை நிறைவேற்றினேன், எனக் கூறினார்.
மேலும், தென் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வந்த போது 4 முறை சந்தித்தேன். அவரை வரவேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை ‘புரோட்டகால்’ கொடுத்தது. பிப்.,27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பும் உண்மை. அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன். பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை ‘தேங்க்யூ பாய்… என தட்டிக்கொடுத்தேன், எனக் கூறினார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.