சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பல முறை ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அன்று இரவே ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜிக்கு திமுகவினர், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எந்த துறையை கவனித்தாரோ மீண்டும் அதே இலாக்கக்களை வழங்கினார் முதலமைச்ச் ஸ்டாலின். நேற்று ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தலைமை செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றார்.
நிபந்தனை ஜாமீன் பெற்று அமைச்சரான பின் முதன்முறையாக இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட ஆஜராகி விட்டு சென்றார்.
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர் அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டர் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் மீண்டும் அமைச்சராகிவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதி ஓகா, ஜாமீனை மறுபரிசீலானை செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய கூறியுள்ளார்.
இதனால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான வேகத்திலேயே அமைச்சர் பதவி ஏற்றதால் அவரது ஜாமீனுக்கு சிக்கல் என கூறப்படுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.