சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 12ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 4 முறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகாமல் இருந்து வருகிறார். மேலும், கரூரில் அவர்கள் கட்டி வரும் சொகுசு பங்களாவும் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
இந்த சூழலில், அசோக்குமாரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை என்று கூறினர். அதேவேளையில், அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் தகவல் வெளியானாலும், இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பிறகு அமலாக்கத்துறையினர் தனது பாணியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.