சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 12ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 4 முறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகாமல் இருந்து வருகிறார். மேலும், கரூரில் அவர்கள் கட்டி வரும் சொகுசு பங்களாவும் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
இந்த சூழலில், அசோக்குமாரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை என்று கூறினர். அதேவேளையில், அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் தகவல் வெளியானாலும், இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பிறகு அமலாக்கத்துறையினர் தனது பாணியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.