அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனை தட்டி தூக்கிய போலீஸ் : பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பரபரப்பு புகார்!!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

இவரது மகள் ஜெயகல்யாணி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.. திருமணம் முடித்த கையோடு, பெங்களூரு சென்ற இந்த தம்பதியினர், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்..

அத்துடன், தன்னுடைய தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரினார் ஜெயகல்யாணி. இது தொடர்பாக புகார் ஒன்றையும் தந்திருந்தார்.. அந்த புகாரில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு, வயிற்றில் குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கணவரின் தந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், அவரின் மீதும் வழக்குப்பதிவு செய்தார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றிபெற்றோம். நாங்கள் சென்னை வந்தால் உயிர்க்கு ஆபத்து.. அதனால், சென்னையில் கோர்ட்டுக்கு வரக்கூட பயமாக உள்ளது. என்னுடைய கணவரை கோர்ட்டில் சரணடைய வைத்தால் லாக்கப் டெத் செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. தமிழகத்தில் லாக்கப் டெத் அதிகரித்துவிட்டது.

ஒருவேளை எங்களுக்கோ, என்னுடைய குழந்தைக்கோ, கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு, என் அப்பா அமைச்சர் சேகர்பாபு, காவலர்கள் ஜானி செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, தாய்மாமா யுவராஜ் ஆகியோர்களே முழு பொறுப்பு ஆவார்கள்.. நாங்கள் கோர்ட்டில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 மாதத்தில் 3 போலி புகார்கள் என்னுடைய கணவரின் மீது பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அப்பா, முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் போலீசாரும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.. இந்த புகாரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் இந்த சதீஷ்குமார்.. 29 வயதாகிறது.. சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் ஏற்கனவே உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சதீஷ்குமார் அதேபகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. அது தொடர்பான புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு, சதீஷை போலீசார் கைது செய்திருந்தனர்.. பிறகு, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், பிறகு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்… இதனால் அல்லிக்குளம் நீதிமன்றம் சமீபத்தில் சதீஷ் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமாரை இன்று புளியந்தோப்பு மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். சேகர்பாபுவின் மருமகன் கைதாகி உள்ள சம்பவம், இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

8 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.