சென்னை : தொடர் விடுமுறை நாட்களையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
தமிழ்ப்புத்தாண்டு, ஈஸ்டர் என அடுத்தடுத்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருக்கும் வெளியூர்வாசிகள், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக, அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தாலும், தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை தனியார் ஆம்னி பேருந்துகளில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என கேட்டறிந்தார். அந்த சமயம் ஒரு சில பயணிகள் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
உடனே அமைச்சர் சிவசங்கர் கூடதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் உங்களுக்கு திருப்பித் தரப்படும் என கூறினார். பிறகு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.