சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்ற அவருக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமை செயலகத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அவரது இருக்கையில் அமர்ந்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி போட்டியை நடத்துவது மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்துவது உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு கட்சியினர் புடைசூழ சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு குடும்பத்தினர் வரவேற்றனர்.
ஏற்கனவே, பகுத்தறிவு பற்றி பேசும் திமுகவினர், சுபமுகூர்த்த நாளில், நல்ல நேரம் பார்த்து உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழாவை வைத்துள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம், ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா..? என்று மேலும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.