அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது : ஆளுநர் தமிழிசை ட்விஸ்ட் !

அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது : ஆளுநர் தமிழிசை ட்விஸ்ட் !

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால் முதலாவதாக சகோதரியாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தென்பகுதிக்கு வருவதில் தாய் வீட்டிற்கு வருவது போல் மகிழ்ச்சியாக உள்ளது.

சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சனையால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. ஏனென்றால் தச்சநல்லூரில் இரண்டு இளைஞர்களை சாதியத்தை சுட்டிக்காட்டி சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக இருக்கிறது.

தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து, நாங்குநேரி நிகழ்வு, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கழிப்பு, மனிதர்கள் மீது சிறுநீர் கழிப்பது ஆகியவை கவலை அடிக்கக்கூடியது. இந்தப் பிரச்சனைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் நீட் தேர்வு தான் நாட்டின் தலையாய பிரச்சனை என்பது போல அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் நீட் தேர்வுக்கு நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது பிரச்சனை என்றால் சட்டரீதியாக அணுகுங்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு இதுதான் பிரச்சினை என்று அதை பின்தொடர்ந்து வருகிறார்கள். இது தவறு.” என்றார்.

சனாதான தர்மம் பற்றிய பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி பேசிய அமைச்சர் உதயநிதி, என்ன செய்தாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனக் கூறியது பற்றிப் பேசிய தமிழிசை, “உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியது குறித்து மன்னிப்பே கேட்க மாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான் என்று கூறுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது குறித்து பேசிய தமிழிசை, “முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தி, எதிரில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.