ED, CID, IT ரெய்டு லக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்றும், அதிமுகவை போல எங்களை கைக்குள் வைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :- நாங்கள் பாஜக ஏவி விடும் ED, CID, IT உள்ளிட்ட சோதனைக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அதிமுகவை கைக்குள் வைத்தது போல திமுகவை வைக்க நினைக்கின்றனர்.
ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. தலைவர் பெங்களூரு சென்று உள்ளது பாஜகவை தூக்கி எறியத்தான், என்று பேசினார்.
அதன் பின்னர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு 10000 ரூபாய் அடங்கிய பொற்கிலியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய, நகர ,பொறுப்பாளர்கள் என திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.