ED, CID, IT ரெய்டு லக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்றும், அதிமுகவை போல எங்களை கைக்குள் வைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :- நாங்கள் பாஜக ஏவி விடும் ED, CID, IT உள்ளிட்ட சோதனைக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அதிமுகவை கைக்குள் வைத்தது போல திமுகவை வைக்க நினைக்கின்றனர்.
ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. தலைவர் பெங்களூரு சென்று உள்ளது பாஜகவை தூக்கி எறியத்தான், என்று பேசினார்.
அதன் பின்னர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு 10000 ரூபாய் அடங்கிய பொற்கிலியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய, நகர ,பொறுப்பாளர்கள் என திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.