தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!!

தப்பியது அமைச்சரின் தலை… சிக்கிய மகன், மருமகன் : பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை!!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி மஸ்தான், மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சி பதவிகளை திமுக தலைமை பறித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான செய்தியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஷேக்வாகித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான உத்தரவை திமுக விளையாட்டு அணி மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார்.
அது போல் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரோமியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்றது முதலே செஞ்சி மஸ்தான் மீது புகார் குவிந்து வந்தன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே மஸ்தான் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தை முழுவதும் அமைச்சர் மஸ்தானின் குடும்பமே பொறுப்பேற்று அதிகாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு திமுக தலைமைக்கு சென்றது.

அமைச்சரின் குடும்பத்தினரே கட்சி பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசரின் மகன் பதவி பறிக்கப்பட்டது, பிறகு அவரது செயல்பாட்டுக்காக அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

14 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

14 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

15 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.