மதுரை காமராஜர் தொலைதூர பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பழைய பேப்பர் கடையிலிருந்து அந்த விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகள் எழுதி விடைத்தாள்களை கொரியர் மூலம் மதுரை காமராஜர் பல்கலைகழக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 500 முதல் 1500 மாணவர்கள் வரை அவர்கள் அனுப்பிய விடைத்தாள்கள் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடு மேய்க்கச் செல்லும் வாலிபர்கள் சிலர் அலுவலகத்தின் ஜன்னல்களை உடைத்து விடைத்தாள்களை திருடி பழைய பேப்பர் கடையில் போட்டதாக கூறப்படுகிறது.
பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு விடைத்தாள்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பழைய பேப்பர் கடையிலிருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதனை மீட்டு தற்போது விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
This website uses cookies.