தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்படவில்லை. அவர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: நட்டாவை பதவியில் இருந்து தூக்க முடிவு… பாஜக தேசிய தலைவராகிறார் சிவராஜ் சிங்? இதுதான் காரணம்!
தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியரே கூறினார். வாக்கு எண்ணிகையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு ஏற்பட்டுள்ளது.
3 மணி முதல் 5 மணி வரையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.