ஒரே ஜெயிலுக்கு நானும் எம்எல்ஏவும் போனோம்… பொதுமக்கள் மத்தியில் பெருமையாக பேசிய திமுக அமைச்சரால் சர்ச்சை!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக அமைச்சர் கே என் நேரு, தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், இந்த மேடையில்தான் அதிக அளவு நான்கு வார்த்தை கூடுதலாக பேசியுள்ளார்.
சட்டமன்றத்தில் அவர் கனகச்சிதமாக இரண்டே வார்த்தையில் பேசி விடுவார். நீண்டகாலமாக எங்களோடு சட்டசபையில் உறுப்பினராக உள்ளார். நாங்க இரண்டு பேரும் ஒரே ஜெயிலுக்கு போனவங்க, அவருக்கு 9 வழக்குகள் எனக்கு 19 வழக்குகள் அவரோடு எனக்கு அதிகமான வழக்குகள் உள்ளது என பேசினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.