திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் இவரது மகள் சுபிக்ஷா.கற்பத்தின் கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து, கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் குகநாதன் வாங்கிய கடனை திரும்ப கேட்டு கற்பகத்தையும் அவர் மக்களையும் நிதி நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. உன் கணவர் வாங்கிய கடனை நீ திருப்பி கொடு; இல்லை என்றால் உன் பொண்ணு கொடுக்கட்டும்”எனக் கூறி டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி போன கற்பகம் மற்றும் அவரது மகள் சுபிக்ஷா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சனை காரணமாகவும் மன உளைச்சலிலும் இது போன்ற விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.