டிரெண்டிங்

பணக்கார ஆண்களை மயக்கி நிர்வாண போட்டோ எடுத்து மிரட்டி பல கோடி மோசடி.. இளம்பெண்ணின் தில்லாலங்கடி!!

பணக்கார ஆண்களை மயக்கி குளிப்னத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஷீலாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் சில காலமாக தங்கியுள்ளது. முரளிநகரை சேர்ந்த கொருப்ரோ ஜாய் ஜமீமா (28) அவர்களின் மகனை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர் மூலம் ஷீலாநகரில் உள்ள அவர்களது வீட்டின் முகவரியை தெரிந்து கொண்டார்.

ஷீலாநகரில் இருக்கும் போது அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த ஜாய் ஜமிமா அவரது பெற்றோருடன் கொஞ்ச நாட்கள் நல்ல பெண்ணாக நடித்தார்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து உங்கள் மகனை திருமணம் செய்து வைக்கும்படி அந்த இளைஞரின் பெற்றோருடன் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் ஜாய் ஜமிமா முதல் திட்டம் தோல்வியடைந்ததது. அதன் பிறகு அந்த இளைஞரும் அவனது குடும்பமும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

ஜாய் ஜமிமா மீண்டும் இரண்டாவது திட்டம் போட்டு மீண்டும் அமெரிக்காவில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட இளைஞரை மீண்டும் விசாகப்பட்டினம் வரவழைத்துள்ளார்.

நேராக விமான நிலையம் சென்ற ஜாய் ஜமிமா முரளிநகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். பின்னர் போதை மருந்து கலந்த குளிர் பானங்களைக் கொடுத்து அந்த இளைஞரை போதையில் மயங்கிய பின்னர் அவன் மீது வாசனை திரவியம் தெளித்து, அவன் மயங்கிய நிலையில் இருக்கும் போது ஆடையில்லாமல் அவனுடன் நெருங்கிய படம் எடுத்துக் கொண்டாள்.

பின்னர் அவற்றைக் காட்டி அந்த இளைஞனை மிரட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டினார். இதனால் அந்த இளைஞர் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறினாலும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மிரட்டி பணிய வைத்தார்.

பின்னர் கடந்த மாதன் பீமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த இளைஞனிடம் ₹.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் தொலைபேசியைத் பிளாக் செய்து அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் நெருக்கமான புகைப்படங்களைக் காண்பித்து மீண்டும் அந்த இளைஞரை அவளது வீட்டில் அடைத்து வைத்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை வைத்து போலீசில் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் ஜாய் ஜமிமா வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது ​​ தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜமிமா கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். ஜெமிமாவை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவரது நண்பர்கள் மூலம் மிரட்டியுள்ளனர்.

இறுதியாக இம்மாதம் 4ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் ஜமிமாவிடம் இருந்து தப்பிச் சென்று பீமிலி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் ஜமிமாவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து லேப்டாப், டேப், மூன்று போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று ஜமிமாவும் அவரது நண்பர்களும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் சிக்க வைத்து பெரும் பணம் பறித்தது தெரிய வந்தது.

ஜமிமாவின் நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் கூறுகையில் ஜமிமா பின்னனியில் பெரிய கும்பல் உள்ளது .

ஜமீமாவுக்கு இந்த கும்பல்தான் பயிற்சி அளித்து எப்படி இளைஞர்களை ஈர்ப்பது எப்படி ? யாரை சிக்க வேண்டும்? போத மருந்தை எவ்வாறு வழங்குவது? வீடியோ எடுத்து மிரட்டுவது எப்படி? இவை அனைத்தும் அவளுக்கு பயிற்சி வழங்கி உள்ளனர்.

அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று விசாகப்பட்டினம் காவல் ஆணையர் பாக்சி தெரிவித்தார்.

மேலும் ஒரு இளைஞர் இதேபோன்று ஜமிமா வளையில் விழுந்து பணத்தை இழந்ததாக தற்போது புகார் அளித்துள்ளார். எனவே ஜமிமா வளையில் சிக்கியவர்கள் போலீசில் புகார் அளிக்குபடி கேட்டு கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

12 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

14 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.