டிரெண்டிங்

முருகன் மாநாட்டில் பல கோடி முறைகேடு… ரவுடி போல அமைச்சர் பேசியுள்ளார் : பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயக்குடி பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கைகாண அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டார்.

அப்போது வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து அவர்களுக்கு அட்டைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது :- பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதில் பல கோடி ரூபாய் நன்கொடையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது, அறநிலைத்துறையிலும் பணம் எடுத்துள்ளனர்.

இதில் பல கோடி ரூபாய் பணம் ஊழல் நடைபெற்றதாக கேள்வி எழுந்துள்ளது இதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்ற வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், நடிகர் விஜய் திமுக வின் B டீம் ஆக செயல்பட்டு வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று திரைப்படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க தெரிந்த நடிகர் விஜய்க்கு, விநாயகர் சதுர்த்தி அன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என தெரியவில்லையா? என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பழனியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ல் கூட்டணி என்பது மத்திய தலைமை முடிவு செய்யும் எனவும் ,தமிழக பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது வருத்தபடகூடியதாக உள்ளது.

இதில் சிறுவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். நல்ல கல்வியை கல்வி துறை கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும், அதே போல கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டமான திருச்சியிலும் கூட்டி பாலியல் தொல்லையும் தஞ்சாவூரிலும் கூட்டு பாலியல் தொல்லை கொடுரம் நடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம்.

கொல்கத்தாவை போல திமுக அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துளார்.

சமீபத்தில் நடைபெற்ற கல்லூரியில் பாவ புண்ணியப் பற்றி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை மகாவிஷ்ணு உடனடியாக கைது செய்ய ப்படுவான் அவனை சும்மா விடமாட்டேன் என்று கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரவுடி போல் பேட்டி அளிக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களை ஈடுபடும் நான்கு பேரை சுட்டுக் கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது என்றும் தெரிவித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.