டிரெண்டிங்

காவலர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி.. மெரினா, மாமல்லபுரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருவர் போலீசாரிடம் இரவு நேரத்தில் தகராறு செய்தது மாமல்லபுரத்தில் காவலாளியை காரில் வந்தவர்கள் தாக்கியது என்ன ஒரே நாளில் நீங்கள் சென்னையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பட்டினப்பாக்கம் லூப் சாலையில், நேற்று (அக்.20) இரவு மயிலாப்பூர் போலீசார் வழக்கமான இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளே அமர்ந்திருந்ததை பார்த்துள்ளனர்.

அவர்கள் நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை வெளியில் வரச் சொல்லி உள்ளனர். பின்னர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் போலீசாரை திட்டியும், வீடியோ எடுத்ததற்கு நன்றாக போஸ் கொடுத்த படியும் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் உதயநிதியை இப்போது வரச் சொல்லட்டுமா என்ற வார்த்தையையும் அந்த நபர் பயன்படுத்தியிருந்தார். எனவே, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் – மனைவி அல்ல என்பது உறுதியானது. பின்னர், மேலும் விசாரிக்கையில், தகராறு செய்த நபர் சந்திரமோகன் என்பதும், அவருடன் இருந்தது அவரது தோழி தனலட்சுமி என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவர் மீதும் பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக, மயிலாப்பூர் போலீசார் சிலம்பரசன் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மற்றொரு சம்பவமும் சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!

இது தொடர்பாக வெளியான வீடியோவின்படி, மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் ஏரியாவிற்குள் ஒரு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கிருந்த காவலாளி இவ்வழியாகச் செல்ல முடியாது என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை மதிக்காமல் உள்ளே சென்றதாகவும் தெரிகிறது. இதனால் அந்த காவலாளி அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள், அந்த காவலாளியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், காரில் இருந்து மற்றொருவரும் இறங்கி அவரை அடிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு சம்பவங்களால் பரபரப்பு உண்டாகி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

20 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

21 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

22 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

23 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

23 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

24 hours ago

This website uses cookies.