சென்னை : அண்ணா நகரில் இருவேறு இடங்களில் பெண்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த விஜயலட்சுமி அண்ணா நகர் அருகே வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டு வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருவரில் பின்னால் அமர்ந்தவர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
பைக்கில் இருந்து இறங்கி விஜயலட்சுமியிடம் செயினை பறித்த போது அவர் தடுத்துள்ளார். ஆனால் அவரை கீழே தள்ளிய இளைஞர், வலுக்கட்டாயமாக அவரை தாக்கி செயின் பறித்து சென்றார்.
இது குறித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அண்ணா நகரில் உள்ள மற்றொரு பகுதியில் இல்லத்தரசியான பிரபாவதி என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று திரும்பிய போது மூதாட்யை தாக்கி 5 சவரன் நகை பைக்கில் வந்த நபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.