சென்னை : அண்ணா நகரில் இருவேறு இடங்களில் பெண்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த விஜயலட்சுமி அண்ணா நகர் அருகே வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டு வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருவரில் பின்னால் அமர்ந்தவர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
பைக்கில் இருந்து இறங்கி விஜயலட்சுமியிடம் செயினை பறித்த போது அவர் தடுத்துள்ளார். ஆனால் அவரை கீழே தள்ளிய இளைஞர், வலுக்கட்டாயமாக அவரை தாக்கி செயின் பறித்து சென்றார்.
இது குறித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அண்ணா நகரில் உள்ள மற்றொரு பகுதியில் இல்லத்தரசியான பிரபாவதி என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று திரும்பிய போது மூதாட்யை தாக்கி 5 சவரன் நகை பைக்கில் வந்த நபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.