கன்னியாகுமரி ; காங்கிரஸ் தேசிய மாநாட்டின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்தை தவிர்த்ததற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குவந்து 55 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் துடிப்பாக இருக்க பெருந்தலைவர் காமராஜரே அதற்கு முக்கிய காரணம். எளியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, பல லட்சம் பேருக்குக் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய படிக்காத மேதை அவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்து இரு பிரதமர்களை அடையாளம் காட்டிய கிங் மேக்கர் பெருந்தலைவர் காமராஜர்.
அன்னை இந்திராவை முன்னிலைப்படுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு முகவரி கொடுத்ததே பெருந்தலைவர் காமராஜர் தான். திறந்த மனதோடு சொல்வதாக இருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமேனும் மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் காமராஜர் தான். அவரால் படித்து, வாழ்வில் உயர்ந்தோர் பலரே அதற்கு சாட்சி. தமிழக முதல்வராகவும், காங்கிரஸின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் பணிகளை இந்த மடலில் எழுதி அனுப்பினால் கடிதத்தின் எடை உங்கள்(மல்லிகார்ஜுன் கார்கே)எடையை விட கூடலாம். அத்தகைய பெரிய மாமனிதரின் புகைப்படத்தைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸ் தேசிய மாநாட்டிற்கு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
மேலும் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று அவர் பெயரை சொல்லியே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்து இப்போதும் உயிர்பிடித்து நிற்கிறது. ஆனால் காமராஜர் புகழை தமிழக மக்களைவிட காங்கிரஸ் அகில இந்தியத் தலைமைக்கு போதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். எனவே இனியும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ய முயலுமே ஆனால், தமிழகம் முழுவதும் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரையும் ஜாதி மதம் பாராமல் கடந்து ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, காமராஜர் பெயரில் தனிக்கட்சித் தொடங்கவும் தயங்கமாட்டோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.