என்னது தேசிய அரசியலா? CM ஸ்டாலின் கும்மிடிபூண்டியை தாண்டியிருக்காறா? அண்ணாமலை அட்டாக்!!

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாகவும், உள்கட்டமைப்பினை வைத்து அரசியல் இங்கு பேசப்படவில்லை ஜாதியை வைத்து தான் அரசியல் செய்யப்படுவதாகவும் மூன்று மாநில தேர்தலில் நிரந்தரமாக அரசியல் இல்லாத இடத்தில் பாஜகவை உடைத்துள்ளதாக தெரிவித்தார்.

திரிபுராவில் 2 சதவிகிதமாக பாஜக இருந்தது கட்சி வளர்ச்சியடைந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளதாகவும், தனிப்பெரும்பான்மையாக திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும், நாகலாந்தில் இரண்டு பங்கு பாஜகவிற்கு இடம் கிடைத்துள்ளதாகவும், மேகலாயவாவில் பாஜக கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி ஆட்சி செய்வதை அஷ்டலட்சுமி என்று கூறுவதாகவும் வடகிழக்கு முழுவதும் பாஜக கட்சி அல்லது பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெறுவதாக கூறினார்.

ஈரோடு தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், ஈரோடு தேர்தலில் மக்கள் தீர்ப்பினை ஏற்பதாகவும் 2024 -ல் தேர்தல் பாஜகவிற்கானதாக இருக்கும் என்றும் ஈரோடு தேர்தல் முடிவை முடிவை தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்தார்.

இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை சார்ந்து தான் ரிசல்ட் இருந்து இருக்கிறது அதற்காக திமுக ஸ்டாலினின் 24 மாத காலம் இருந்ததற்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று ஏற்று கொள்ள மாட்டோம் எனவும் 2024 வரை இடைத்தேர்தல் நடக்க கூடாது என வேண்டி கொள்ளவதாக அண்னாமலை கூறினார்.

திமுகவிலிருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாள்வதாகவும் திமுக கூட்டணியிலிருந்து வெளி வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம் சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை.

பாஜக கட்சி, அண்ணாமலையை மட்டுமே பேசுவதற்கு திருமாளவன் கூட்டம் போடுவதாகவும், காஷ்மீரில் மட்டும் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1200 தீவிரவாதிகள் சுடப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கேஸ் இல்லை என்பது கேஸ் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதுள்ளதாகவும் மோடி தலைமையிலான அரசு சொல்லாமைல் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதாகவும் மாநில அரசுகள் வாக்குறுதி கொடுத்தும் குறைக்கவில்லை என கூறினார்.

கேஸ் பெட்ரோல், டீசால் போன்றவைகள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுவதால் தான் விலையேற்றம் ஏற்படுவதாகவும், கூட்டணி நட்பு என்பது ஒரு சித்தாந்தத்தோடு இருப்பதால் பாஜக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரித்து வாக்கு சேகரித்ததாகவும்,தங்களின் கூட்டணி பலமாக தான் உள்ளதாகவும் கருத்தியல் குறித்து விவாதிக்க தயாரா என கேட்கும் திருமாவளவன் தடா பெரியசாமி கிட்ட கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா எனவும் ஜாதிய அமைப்புகளை கொண்ட கட்சியாக விசிக உள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இணைவது என்பது அவர்களது கட்சி சார்ந்த முடிவு அதில் நாங்கள் தலையிட முடியாது எனவும் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு அமைச்சர்கள் சிறையில் உள்ளதால் தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று கூறினார்.

தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ஸ்டாலின் கும்முடி பூண்டியை தாண்டாமல் எப்படி தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் பரூக் அப்துல்லா தேஜஷி யாதவ் போன்றவர்கள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வருவது தேசிய அரசியல் இல்லை எனவும் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு தேசிய அரசியல் பற்றி பேசுவது தான் தேசிய அரசியல் என தெரிவித்தார்.


விலைபோகாத கத்திரிக்காயை கொண்டு வந்து தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாகவும் கர்நாடாகவில் திமுக போட்டியிட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிட்டு அதன் பிறகு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டுவதாக கூறினால் ஏற்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.