நீட் தேர்வில் தோல்வியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். புகைப்பட கலைஞரான இவருக்கு ஜெகதீஸ்வரன் (19) என்ற மகன் இருந்தார். சிபிஎஸ்இ-யில் பிளஸ் 2 படித்த இவர், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட ஜெகதீஸ்வரன், 2 வருடமாக நீட் தேர்வை எழுதி வந்தார். ஆனால், 2 முறையும் தேர்ச்சியடையவில்லை.
இருப்பினும் 3வது முறையாக நீட் தேர்வை எழுதி, அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிப்பேன் என்று தனது தந்தையிடம் நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். இதற்காக நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டார். தன்னுடன் நீட் பயிற்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காததால் என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். அதோடு, சிலர் அதிக பணம் கட்டி நிர்வாக சீட்டை வாங்கி மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டனர்.
இதனால், மனகுழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.