நீட் தேர்வில் தோல்வியடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். புகைப்பட கலைஞரான இவருக்கு ஜெகதீஸ்வரன் (19) என்ற மகன் இருந்தார். சிபிஎஸ்இ-யில் பிளஸ் 2 படித்த இவர், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட ஜெகதீஸ்வரன், 2 வருடமாக நீட் தேர்வை எழுதி வந்தார். ஆனால், 2 முறையும் தேர்ச்சியடையவில்லை.
இருப்பினும் 3வது முறையாக நீட் தேர்வை எழுதி, அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிப்பேன் என்று தனது தந்தையிடம் நம்பிக்கையாக கூறி வந்துள்ளார். இதற்காக நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டார். தன்னுடன் நீட் பயிற்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காததால் என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். அதோடு, சிலர் அதிக பணம் கட்டி நிர்வாக சீட்டை வாங்கி மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டனர்.
இதனால், மனகுழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.