கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழந்து, தனித்தீவு போல காட்சியளிக்கின்றன. அதிலும், திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் கனமழை ஓய்ந்து, தற்போது லேசான மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
கனமழை ஓய்ந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. அதேவேளையில், இரு மாவட்டங்களில் வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் மனதில் நம்பிக்கை துளிரச் செய்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.