சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பிரியாணி கொடுப்பதாகக் கூறி, திமுகவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய முதல் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. எனவே, இந்தப் படத்தை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பேனர்கள், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தை பெரும்பாலும் திமுக தொண்டர்கள் அதிகளவில் பார்த்து ரசித்து வரும் நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் உதயநிதியின் படத்தை திரையரங்கில் பார்ப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வாழ்த்தி பெரம்பலூரில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பேனர் வைத்ததும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் பெரும்பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்டும் கொடுத்து பிரியாணியும் போடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்… படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.