ராகுல்காந்திக்கு அடுத்த நெருக்கடி : பாரத் யாத்திரைக்கு தடை? பாஜக கொடுத்த தலைவலி..!!

ராகுல்காந்திக்கு அடுத்த நெருக்கடி : பாரத் யாத்திரைக்கு தடை? பாஜக கொடுத்த தலைவலி..!!

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி 2வது கட்டமாக ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை என்பது வரும் 14 ம் தேதி மணிப்பூரில் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த யாத்திரை மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவு நடைபெற உள்ளது. மொத்தம் 66 நாட்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்து இந்த தொலைவை கடக்க உள்ளார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 20ம் தேதி இந்த யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை என்பது வரும் 14ம் தேதி மணிப்பூர் மாநிலம் ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் மணிப்பூரில் இந்த யாத்திரையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அங்குள்ள அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அனுமதி கோரிய கடிதம் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதாவது மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் மணிப்பூரின் மோரே பகுதியில் புதிதாக வன்முறை நடந்தது. கடும் துப்பாக்கிச்சண்டை என்பது நடந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதனை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் யாத்திரைக்கு இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பீரன் சிங் கூறுகையில், ‛‛மாநிலத்தில் காவல்துறையின் செயல்பாட்டால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை செய் வருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பின் உறுதியான முடிவை எடுப்போம்” என்றார்.

இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து நீதி யாத்திரை தொடங்கப்பட உள்ளது.

இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் மத்திய அரசின் வேலையா?” என்று கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.