அடுத்த அமைச்சர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி : அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி.. அரசியலில் பரபரப்பு!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இக்கூட்டணியில் காங்., கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆலம்கீர் ஆலம்,70 மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நடந்துள்ள பணமோசடி குறித்து ஆலம் கீர்ஆலம், அவரது தனிச்செயலர் சஞ்சீவ் லால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
மேலும் படிக்க: அரசாணை எண் 66ஐ திரும்பப் பெற வேண்டும்.. வஞ்சம் வேணா.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
இதையடுத்து இன்று அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதில் ஆலம்கீர் ஆலமிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.