வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மும்பை மாநகருக்குள் புகுந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பல இடங்களில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தினர். மொத்தம் நான்கு நாட்கள் நடந்த இந்தத் தாக்குதலில் இறுதியில், ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியாவை பெரிதும் ரனமாக்கியது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் பயங்கரவாத பயிற்சி பெற்ற ஆபத்தான நபர் மும்பைக்கு வந்துள்ளதாக மும்பை போலீசாரை என்ஐஏ எச்சரித்துள்ளது. இது தொடர்பான அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “டேஞ்சர்” என்று குறிப்பிடப்பட்டு, சர்பராஜ் மேமன் என்ற அந்த நபர் ஆபத்தானவராக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தூரில் உள்ள தார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கும் அவர் சென்று பயிற்சி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பாகிஸ்தான் சென்றதற்கான கூடுதல் தகவல்கள் எதுவும் அதில் இல்லை. மேலும், என்ஐஏ அனுப்பிய அந்த எச்சரிக்கை மெயிலில் குறிப்பிட்ட அந்த நபரின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், அந்த நபர் குறித்துக் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.