என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்து உயர்நீதிமதின்றதில் தொடரப்பட்ட வழக்கில், இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில், மனுதாரர் முருகன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நிலம் கையகப்படுத்தப்பட்டு இவ்வளவு ஆண்டுகளாகி, தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் சமயத்தில் கால்வாய் தோண்டுவது குறித்து இதற்கு தடைவிதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி, பயிர்களுக்கான இழப்பீடு குறித்து பிரமானபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டார்.
மேலும் தமிழக அரசு தரப்பில் செப்டம்பர்-15க்குள் அறுவடையை முடித்து நிலத்தை திருப்பித்தரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு நீதிபதி, அறுவடை முடிந்த பின் நிலத்தை திருப்பித்தருவோம் என உத்திரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு, நீதிபதி கையகப்படுத்தப்பட்ட பின்பு உங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு வேலி கூட இதுவரை ஏன் அமைக்கவில்லை என என்எல்சி தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
நிலத்தை சேதப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும், கால்வாய் தோண்டாவிட்டால் என்எல்சியிலிருந்து தண்ணீர் போக வழியில்லாமல் வெள்ளம் பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற பாதிப்பும் ஏற்பட்டுவிடும் என என்எல்சி தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தரப்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வழக்கின் தீர்ப்பு பொருந்தாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது, வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.