என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்து உயர்நீதிமதின்றதில் தொடரப்பட்ட வழக்கில், இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில், மனுதாரர் முருகன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நிலம் கையகப்படுத்தப்பட்டு இவ்வளவு ஆண்டுகளாகி, தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் சமயத்தில் கால்வாய் தோண்டுவது குறித்து இதற்கு தடைவிதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி, பயிர்களுக்கான இழப்பீடு குறித்து பிரமானபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டார்.
மேலும் தமிழக அரசு தரப்பில் செப்டம்பர்-15க்குள் அறுவடையை முடித்து நிலத்தை திருப்பித்தரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு நீதிபதி, அறுவடை முடிந்த பின் நிலத்தை திருப்பித்தருவோம் என உத்திரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு, நீதிபதி கையகப்படுத்தப்பட்ட பின்பு உங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு வேலி கூட இதுவரை ஏன் அமைக்கவில்லை என என்எல்சி தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
நிலத்தை சேதப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும், கால்வாய் தோண்டாவிட்டால் என்எல்சியிலிருந்து தண்ணீர் போக வழியில்லாமல் வெள்ளம் பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற பாதிப்பும் ஏற்பட்டுவிடும் என என்எல்சி தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தரப்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வழக்கின் தீர்ப்பு பொருந்தாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது, வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.