மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு பெண்கள் கூட விடுபடக்கூடாது : அமைச்சர் உதயநிதி பேச்சு!!
நெல்லையில், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் 8,844 பயனாளிகளுக்கு சுமார் ₹157.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கும் இந்த உரிமை தொகை திட்டம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர் மட்டுமன்றி திருங்கையர், மாற்று திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் சொன்னது போல தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது.
அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களை சென்றடைய வேண்டும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் நமது திரவிட மாடல் அரசின் லட்சியம் ஆகும்.
பெண்ணுரிமை குறித்து பெரியார் கண்ட கனவுகளுக்கெல்லாம் நமது திராவிட மாடல் அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞரை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.