ஈரோடு மாவட்ட கனிராவுத்தர்குளத்தில் எடப்பாடி பழனிசாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனை சரி செய்ய வேண்டும் என்று ஈரோடு அதிமுகவினர் கோரிக்கை அளித்தனர். அதன் பின்னர், ரூ.484 கோடி அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் செய்யப்பட்டது.
அதனை நானே நேரடியாக திறந்து வைத்தேன். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது அதிமுக தான். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக அதிமுக ஆட்சியில் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது அதிமுக தான். இதுபோல் அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இன்று 21 மாத திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக 25 அமைச்சர்கள் முகாமிட்டு, பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு அமைச்சர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் கூட, ஈரோடு கிழக்கு தொகுதி மேம்பட்ட தொகுதியாக இருந்திருக்கும். இன்று மக்களின் கோரிக்கைகளை அமைச்சர்களாக கேட்டு குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் ஏன் இவற்றை முன்னதாகவே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி 2021 தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு வெற்றிபெற்றார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் 520 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
ஆனால் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 85 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.