ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், பேனாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படிப்பட்ட பேனா தெரியுமா என புகழ்கிறார்கள்.
நான் அதை எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினால் வெளியில் தலைகாட்ட முடியாது. அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா இல்லை. பார்த்து பேசணும், உடைப்பியா சீமான்? என்றால் ஆமாம் உடைப்பேன்.
இதையே ஓயாமல் கேட்டால், மண்டையை உடைப்பேன், நீங்கள் அதிகாரத் திமிறில் ஆட்டத்தைப் போட்டுப் பேனாவை வைத்தால் என் அதிகாரம் எனக்கு வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது. பெயர்த்து எறிந்து விடுவேன்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் நிற்கும்.
பிபிசி ஆவணப்படம் எடுத்தற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுகிறேன். எங்கே எனக்கு ஒரு ரெய்டு விடுங்களேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இடைத்தேர்தலில் ஜெயித்து காட்ட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வந்தவரை வசூலித்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்கும் உங்களுக்கு எதற்கு இலவசம்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.