ராமநாதபுரம் ; தான் முதலமைச்சரானால் மீனவர்களுக்கு வெடிகுண்டு, ஆயுதங்கள் கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ரெகுநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘எங்கள் மண்.. எங்கள் உரிமை’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண் இளங்கோ தலைமை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அதை மீட்டே தீருவோம். தமிழக அரசு மதுபான விற்பனையில் தீவிரம் காட்டி வருகிறது. குவாட்டர் பாட்டிலில் பாதியை சிறிய பாட்டில் போட்டு விற்பனை செய்வது குறித்து பல்வேறு ஆய்வு கட்ட பணிகள் நடத்தபட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக மக்களுக்கு கொடுப்பது இல்லை.
டிஐஜி விஜயகுமார் உயிர் நீத்த நிகழ்வுக்கு செல்லாத முதலமைச்சர் ஸ்டாலின்,செந்தில் பாலாஜி கைது செய்த போது படைபட்டாளத்தோடு மருத்துவமனையில் காத்துக் கிடக்கிறார்.
இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருவதை வன்மையாக கண்டித்து பேசினார். மேலும், நான் முதல்வரானால் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் கையில் வெடிகுண்டு, அதி நவீன ஆயுதம் கொடுத்து அனுப்புவேன். ஒவ்வொரு படகிலும் பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் கூடுதலாக அனுப்பப்படும், எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.