பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார்.
பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார். இதையடுத்து கனிமொழி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.
அதற்கு பதிலடியாக, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்கள் கட்சியை வளர்க்க நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் படிக்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. பனியன் கம்பெனி டெய்லருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு!
திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு தெரிந்த இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் எதுக்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி அவர்கள் கட்சியை வளர்ப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.