பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார்.
பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார். இதையடுத்து கனிமொழி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். தகுதி இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி கூறி இருந்தார்.
அதற்கு பதிலடியாக, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறினார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாஜக-வினர் பெரியார் வாழ்க என்ற சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்கள் கட்சியை வளர்க்க நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் படிக்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. பனியன் கம்பெனி டெய்லருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு!
திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு தெரிந்த இயக்கம். என்னை இங்கிருந்து யாரும் எதுக்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி அவர்கள் கட்சியை வளர்ப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.