வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன் என்றும், சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமானத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வருகின்ற 20ஆம் தேதி தாக்கல் ஆக உள்ளது. தாக்கல் செய்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன், எனக் கூறினார்.
டிடிவி தினகரன் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு? வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன். சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன், என தெரிவித்தார்.
அதிமுக புதிய உறுப்பினர் அட்டை மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு?, ஆரம்பத்தில் இருந்தே அவருடைய நடவடிக்கைகள் இன்று வரை சட்ட நீதிக்கு புறம்பானதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் புத்தி இல்லாதவர்கள், என்று சைகையில் பதில் அளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.