ஒப்பந்ததாரரின் உயிரை பறித்த திமுக கொடிக்கம்பம் ; அமைச்சர் உதயநிதி வருகைக்காக போடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றும் போது நிகழ்ந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 7:03 pm
Quick Share

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகைக்காக போடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று சிவகங்கைக்கு வருகை புரிந்தார். அங்கு காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அறிவு சார் மைய கட்டிட பணியை ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

முன்னதாக, அமைச்சரை வரவேற்க உள்ளூர் திமுகவினர் சார்பில் சாலையில் இருபுறமும் தி.மு.க. கொடி கம்பங்கள் நடப்பட்டன.

நிகழ்ச்சிகள் முடிந்து அமைச்சர் உதயநிதி அங்கிருந்து புறப்பட்டதும், சாலைகளில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மருதுபாண்டியர் நகர் பகுதியில் உள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் வீரமலை (54) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். மின்சாரம் தாக்கி கொடி ஒப்பந்தகாரர் ஏழுமலை இறந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைகளில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், இதுபோன்ற விதிமீறல்கள் உயிரிழப்புகள் தொடருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 383

0

0