மதுரை : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த ஆன்லைன் ரம்மியின் கோரபிடியில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.
இதனை தடுக்க ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்பேரில், தமிழக அரசும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் முல்லக்காடு பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார். இந்த நிலையில், அதிக பணம் இழந்ததால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.