இன்னும் 2 தொகுதிகள்தான்… எனக்கு நம்பிக்கை இருக்கு : திடீரென உருக்கமாக பேசிய அண்ணாமலை!
அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நம்முடைய ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை இன்றோடு 232 தொகுதிகளை கடந்திருக்கிறது.
சற்று நேரத்துக்கு முன்பு, 232-வது தொகுதியாக மதுராங்கத்தை கடந்துவிட்டு, நாளை மறுதினம் (மார்ச் 27) 233-வது தொகுதியாக திருப்பூரிலும், பிறகு 234-வது தொகுதியாக பல்லடத்திலும் இந்த யாத்திரையை நடத்தவுள்ளோம்.
இந்தக் கடுமையான பயணத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மோடு சகோதர சகோதரிகள், மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும்திரளாக வந்து எங்களுக்கு ஊக்கத்தை கொடுத்திருக்கீங்க. ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.
தமிழக அரசியலில் இத்தனை ஆண்டுகாலமாக நாம் எதிர்பார்த்த மாற்றம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் நடைபெறப் போகிறது. ஒருபக்கம், மோடி ஐயாவின் அற்புறதமான ஆட்சி. மறுபக்கம், தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு. இன்னொரு பக்கம், நேர்மையான அரசியலுக்கான தமிழக மக்களின் ஏக்கம். இந்த மூன்றும் சேர்ந்து 2024-இல் நமக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். என்னுடன் இந்த பாதயாத்திரையில் ஆரம்பம் முதல் கடைசி வரை பயணம் செய்தவர்கள்,
யாத்திரையில் கலந்துகொண்டவர்கள், யாத்திரைக்கு உதவியவர்கள், யாத்திரையில் கலந்துகொள்ள தவறியவர்கள் என உங்கள் அனைவரையும் உங்கள் அன்பு தம்பியாக பல்லடத்தில் மார்ச் 27-ம் நடைபெறும் யாத்திரைக்கு வர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன். இது என்னுடைய யாத்திரையோ, பாஜகவின் யாத்திரையோ அல்ல. இது உங்களின் யாத்திரை.
இந்த யாத்திரையில் நமது பிரதமர் நரேந்திர மோடி சரியாக 2 மணிக்கு கலந்துகொள்வார்கள். நீங்கள் நேரடியாக வந்து நமது பிரதமருக்கு உங்கள் ஆசிர்வாதத்தை கொடுங்க. அன்பை கொடுங்க. எங்களுடன் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று உரக்க சொல்லுங்கள். நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.