அதிமுக வென்றால்தான் அந்த விஷயம் தமிழகம் முழுவதும் நடக்கும்… அண்ணாமலை சொன்ன தகவல்!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட இடையன்காட்டு வலசு பகுதியில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக 517 வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில், 49 தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூலம் வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகம்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்றால், 22 மாதத்திற்கு ரூ 22 ஆயிரம் தர வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் தருவதாக கூறினர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 1.21 லட்சம் பேர்ர் சமையல் எரிவாயு பயன்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு 22 மாதத்திற்கு ரூ. 2200 வழங்க வேண்டும். எனவே, உங்களிடம் வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் ரூ 24 ஆயிரத்து 200 கொடுக்க வேண்டும் என கேளுங்கள்.

அதோடு, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நிறவேறும்.

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து, தமிழக அரசியலை 1950- 60 காலகட்டத்திற்கு திமுக எடுத்துச் சென்றுள்ளது.

இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடக்கவில்லை. இங்கு முகாமிட்டுள்ள 30 அமைச்சர்களும், வரும் 27-ம் தேதி வரை வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள்.

அதன்பின், அவர்கள் ஓடி விடுவார்கள். ஆனால், அதிமுக சார்பில் இருமுறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் எளிமையோடு உங்களைச் சுற்றி வருவார்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் சென்னையில்தான் இருப்பார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ 1200 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 22 மாத கால திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது. இப்படி தடம்புரண்டு செல்லும் ஆட்சியை சரிசெய்ய, ஒரு பெரிய மணியாக இந்த இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும்.

திருமங்கலம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களால், இந்திய அளவில் தமிழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் தீங்கான செயல்களால், இப்பகுதி மக்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்.

இது எப்போதும் நமக்கு வேண்டாம். நாம் நல்லவர்களுக்கு வாக்களிப்போம். கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்த திமுக தொண்டர்களுக்காக, அந்த கடைக்கு சென்று ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

தற்போது, கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் ஒருவரால்,ராணுவ வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நாட்டைக்காக்கும் ராணுவ வீரர் கொல்லப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

கொப்பரை தேங்காய், தேங்காய் எண்ணெய் ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலையும், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு கூட இதுவரை வெளியாகவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

4 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

4 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

4 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

5 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

6 hours ago

This website uses cookies.