அதிமுக வென்றால்தான் அந்த விஷயம் தமிழகம் முழுவதும் நடக்கும்… அண்ணாமலை சொன்ன தகவல்!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட இடையன்காட்டு வலசு பகுதியில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக 517 வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில், 49 தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூலம் வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகம்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்றால், 22 மாதத்திற்கு ரூ 22 ஆயிரம் தர வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் தருவதாக கூறினர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 1.21 லட்சம் பேர்ர் சமையல் எரிவாயு பயன்படுத்துகின்றனர்.

அவர்களுக்கு 22 மாதத்திற்கு ரூ. 2200 வழங்க வேண்டும். எனவே, உங்களிடம் வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் ரூ 24 ஆயிரத்து 200 கொடுக்க வேண்டும் என கேளுங்கள்.

அதோடு, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நிறவேறும்.

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து, தமிழக அரசியலை 1950- 60 காலகட்டத்திற்கு திமுக எடுத்துச் சென்றுள்ளது.

இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடக்கவில்லை. இங்கு முகாமிட்டுள்ள 30 அமைச்சர்களும், வரும் 27-ம் தேதி வரை வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள்.

அதன்பின், அவர்கள் ஓடி விடுவார்கள். ஆனால், அதிமுக சார்பில் இருமுறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் எளிமையோடு உங்களைச் சுற்றி வருவார்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் சென்னையில்தான் இருப்பார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ 1200 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 22 மாத கால திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது. இப்படி தடம்புரண்டு செல்லும் ஆட்சியை சரிசெய்ய, ஒரு பெரிய மணியாக இந்த இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும்.

திருமங்கலம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களால், இந்திய அளவில் தமிழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் தீங்கான செயல்களால், இப்பகுதி மக்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்.

இது எப்போதும் நமக்கு வேண்டாம். நாம் நல்லவர்களுக்கு வாக்களிப்போம். கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்த திமுக தொண்டர்களுக்காக, அந்த கடைக்கு சென்று ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

தற்போது, கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் ஒருவரால்,ராணுவ வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நாட்டைக்காக்கும் ராணுவ வீரர் கொல்லப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

கொப்பரை தேங்காய், தேங்காய் எண்ணெய் ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலையும், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு கூட இதுவரை வெளியாகவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.