எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள்(அதிமுக எம்.எல்.ஏக்கள்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. வருகிற 13ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மூத்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வாறு முறையிட வேண்டும் என்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
நாளை காலை 9.15 மணியளவில் வேலுமணி உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.