உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார் பேரறிவாளன்.
இதே போல கொளத்தூர் மணி, உதயநிதி ஸ்டாலின், கோவையில் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் ஆறுச்சாமி உள்ளிட்டோரை பேரறிவாளன் சந்தித்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இல்லத்திற்கு சென்ற பேரறிவாளன் நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்கள் இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்கள் மூத்த பிள்ளை என பதிவிட்டுள்ளார்.
1977ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், பின்னர் திமுகவில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசில் அமைச்சராகவும் பின்னர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கணவருடன் 1992-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 11 மாதம் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறை தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.