இலவசமாக டிரெய்லர் திரையிடப்படும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது. அப்போது, தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் பீஸ்ட் டிரைலர் பார்க்க குவிந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர். நுழைவாயிலில் இருந்து ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றதில் கண்ணாடி உடைந்ததாகவும் ட்ரெய்லர் பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடியதில் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகள் ஏற்படும்போது திரையரங்கத்தின் உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
This website uses cookies.