நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்பியாக உள்ள 6 திமுக எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் போக, எஞ்சியுள்ள 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில், மூத்த திமுக எம்பிக்கள் அப்படியே களமிறங்கும் நிலையில், கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்பியாக உள்ள 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தொகுதியில் கடந்த முறை செந்தில் குமார் போட்டியிட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அ.மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சேலம் தொகுதியில் எஸ் பார்த்திபனுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வகணபதியும், தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட பழனி மாணிக்கத்திற்கு பதிலாக, முரசொலியும், தென்காசி தொகுதியில் தனுஷ் எம் குமாருக்கு பதிலாக ராணி ஸ்ரீகுமாரும், கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மலையரசனும், பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சண்முகநாதனுக்கு பதிலாக ஈஸ்வரசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு விமர்சனங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல, 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்ட நிலையில், ஆளும் திமுகவும், பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் தற்போது வரை 7 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, தென்சென்னை, காஞ்சிபுரம் (தனி), வடசென்னை ஆகியவை ஆகும். எஞ்சிய வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடும் நிலையில், நேருக்க நேர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.